சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன், பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தக் கைது நடவடிக்கை, முன்னதாக மாளிகாவத்தையில் 206 கிராம் போதைப்பொருளுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டதை அடுத்து இடம்பெற்றுள்ளது.
அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், அங்கொடையில் உள்ள அவரின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது நான்கு பொதிகளில் இருந்து 3 கிலோ 784 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
The Colombo Crimes Division has arrested four individuals, including a woman, with over 4 kilograms of heroin valued at approximately 50 million rupees. The arrests followed the initial apprehension of a woman in the Maligawatte area with 206 grams of heroin. Based on her information, police searched her home in Angoda, where they discovered an additional 3.784 kilograms of the drug.


