விருந்துபசார நிகழ்வின்போது 30 வயது இளைஞரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்திற்காக, தங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி மூன்று பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
14 ஆண்டுகளுக்கு முன்பு, வலஸ்முல்ல, மெதகன்கொட பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, இந்த இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் 2011ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் திகதி நடந்தது.
வலஸ்முல்ல, பன்சலகொட பகுதியைச் சேர்ந்த 30 வயது இளைஞரே இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலைக் குற்றத்திற்காகவே, மூவருக்கும் தங்காலை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
The Tangalle High Court has sentenced three people to death for the murder of a 30-year-old man. The incident occurred 14 years ago at a party in Medagangoda, Walasmulla, where the victim was stabbed to death following an argument. The court issued the verdict for the murder which took place on January 12, 2011.


