திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ககன்ராவ் (வயது 29). இவர் ஒரு வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மேகனா ஜாதவ். இவர்களுக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
குடும்பத் தகராறு
இந்த புதுமணத் தம்பதியின் வாழ்க்கையில் சமீப காலமாகக் குடும்பத் தகராறுகள் தலை தூக்கத் தொடங்கின. அதாவது, மனைவி மேகனா ஜாதவ், தன் கணவரிடம் எந்தக் காரணமுமின்றி அடிக்கடி சண்டை பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தத் தகராறு நாளுக்கு நாள் அதிகரித்ததால், புதுமாப்பிள்ளை ககன்ராவ் தனது வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினமும், ககன்ராவிடம் அவரது மனைவி சண்டை போட்டுள்ளார்.
இதனால் மனமுடைந்த ககன்ராவ், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, அவர் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கேள்விப்பட்ட ககன்ராவின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சம்பவம் பற்றித் தகவல் அறிந்ததும் பொலிஸார் உடனடியாக விரைந்து வந்து, தற்கொலை செய்த ககன்ராவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை தொடர்பாகக் ககன்ராவின் சகோதரி, கிரிநகர் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.
அதன்பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி அளித்த தொல்லையின் காரணமாகப் புதுமாப்பிள்ளை திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
A 29-year-old bank employee named Gagan Rao from Girinagar, Bangalore, committed suicide by hanging himself at his home just eight months after getting married, a tragedy that has caused widespread shock. The man’s sister filed a complaint with the Girinagar Police, alleging that his wife, Meghna Jadhav, frequently instigated arguments without cause, leading Gagan Rao to become deeply frustrated with life. Following the latest argument, the distraught husband took his own life. Police have registered a case and are conducting a thorough investigation into the incident.


