கண்டி, பேராதனை வீதியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் முகத்தில் உள்ள தழும்புகளுக்குச் சிகிச்சை பெற வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் சேட்டை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கண்டி குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகம் ஒருவரைக் கைது செய்துள்ளது.
அங்க சேட்டை
அந்த இளம் பெண் நேற்று (13) மதியம் சிகிச்சைக்காக மருத்துவ மையத்திற்குச் சென்றிருந்தார். அங்கே சிகிச்சைக்காக அவரிடம் ரூ.35,000 செலுத்தும்படி வைத்தியர் கேட்டுள்ளார்.
அந்தப் பெண்ணிடம் ரூ.20,000 மட்டுமே இருந்ததால், மீதமுள்ள தொகையை பின்னர் செலுத்த யுவதி அவகாசம் கேட்டுள்ளார். இதன் போது, ரூ.5,000 சிறப்புக் கழிவாகச் செலுத்தி, மீதமுள்ள ரூ.10,000-ஐப் பின்னர் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்பின்னர், மருத்துவ நிபுணர் என்று கூறிக் கொண்ட குறித்த சந்தேக நபர், யுவதியின் உடலைப் பரிசோதிப்பதாகக் கூறி அவரிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், குறித்த சந்தேக நபரை கண்டிப் பொலிஸார் கைது செய்துள்ளனர். கண்டிப் பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
The Kandy Children and Women’s Bureau has arrested an individual in connection with an alleged sexual harassment incident at a private medical center on Peradeniya Road, Kandy. The female victim, who visited the center yesterday (13) for scar treatment, was initially asked to pay Rs. 35,000 for the procedure. After negotiating a discounted payment plan, the male suspect, who claimed to be a medical specialist, reportedly sexually harassed the woman under the pretense of conducting a physical examination. The arrest was made following a formal complaint lodged by the woman with the police. The Kandy Police are conducting further investigations.



