Wednesday, January 15, 2025

ஜனாதிபதியின் புதிய திட்டம்! வெளியிடப்பட்ட அறிவிப்பு

Clean Sri Lanka” வேலைத் திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி ஒரு செயலணி நியமித்து, அந்தச் செயலணி குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டது.

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்தின் அடிப்படையில் இந்த வேலைத் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் இதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்டது. இந்த செயலணியில் முப்படைத் தளபதிகள், பதில் பொலிஸ் மா அதிபர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உட்பட 18 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திட்டத்தின் நோக்கம் நாட்டின் மக்களின் நல்வாழ்வு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்தை உறுதி செய்வதுடன், சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை விழிப்புணர்வை அதிகரிப்பதாகும். மேலும், சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சமூக நிலைத்தன்மை, அரசு இயந்திரங்களை வலுப்படுத்தும் முயற்சிகளையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், “Clean Sri Lanka” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி அமைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த செயலணியில் உள்ள உறுப்பினர்கள்:

  1. என். எஸ். குமாநாயக்க – ஜனாதிபதியின் செயலாளர்
  2. இராணுவத் தளபதி
  3. கடற்படைத் தளபதி
  4. விமானப்படைத் தளபதி
  5. W. L. A. சமன் பிரியந்த – பதில் பொலிஸ் மா அதிபர்
  6. பொறியியலாளர் குமுது லால் டி சில்வா – நகர அபிவிருத்தி அதிகார சபை தலைவர்
  7. ஐ. எஸ். ஜயரத்ன
  8. கிஹான் டி சில்வா
  9. சந்தியா சல்காது
  10. கலாநிதி காமினி பட்டுவிட்டகே
  11. கலாநிதி அனுருத்த கமகே
  12. தில்ருக் வனசிங்க
  13. தீபால் சூரியராச்சி
  14. சிசர அமர பந்து
  15. கிரிஷாந்த குரே
  16. ஜயது பெரேரா
  17. ருவான் வீரசூரிய
  18. தயான் கருணாரத்ன

மேலும், இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் உறுப்பினர்கள் ஒருவரும் சேர்க்கப்படவில்லை என்பது முக்கியமான தகவலாகும்.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img