Wednesday, January 15, 2025

யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்பி சர்ச்சை ஏற்படுத்தினர்; அரச அதிகாரிகள் கடும் கோபம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்விகள் மூலம் சச்சரவும் குழப்பமும் உருவாகியுள்ளது.

அரச அதிகாரிகள் அர்ச்சுனா எம்பியை கூட்டத்தில் இருந்து வெளியேற்ற கோரியதால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது. பின்னர், கூட்டத்தின் தலைவராக இருக்கும் கடற்றொழில் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரான இராமலிங்கம் சந்திரசேகர் தலையிட்டு, நிலைமை சுமூகமாக்கினார்.

இன்றைய (13) கூட்டத்தில், இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக தனது பதவியை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

அதேவேளை, யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் த. சத்தியமூர்த்தி, அதிகாரிகளை கேலி செய்யும் நடவடிக்கைகள் அவர்களின் மனநிலையை பாதிக்கும் மற்றும் மக்கள் சேவைகளை பாதிக்கும் என்று தெரிவித்தார். மேலும், கூட்டங்களில் அதிகாரிகள் அவமதிக்கப்படுவதால், அவர்கள் கூட்டங்களை விட்டு வெளியேறும் நிலையும் உருவாகும் எனக்கூறினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும்போது நாங்கள் வரவேற்க தயாராக உள்ளோம். ஆனால் நடைமுறைகளை மீறி அத்துமீறிப் பிரவேசிக்க முயன்றால், கடவுளாக இருந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என கண்டிப்புடன் தெரிவித்தார்.

அர்ச்சுனா எம்பி அண்மையில் யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து ஆடம்பரமாக நடந்துகொண்ட நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img