ஐஸ் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட மன்னாரைச் சேர்ந்த மேசன் தொழிலாளிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த ஒரு 21 வயது இளைஞருக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் ஒரு மேசன் தொழிலாளி ஆவார்.
குறித்த பிரதிவாதி, 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் திகதி அன்று ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்றபோது, மன்னார், எழுத்தூர் சந்திக்கு அருகில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பின்னர், சட்டமா அதிபரால் 2008 ஆம் ஆண்டு 1 ஆம் இலக்க போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் அந்தப் பிரதிவாதிக்கு எதிராகக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
விசாரணையின் முடிவில் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி ரஷாந்த கொடவெல, வழக்குத் தொடுனரால் (Prosecutor) பிரதிவாதி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த 10 வருட கடூழியச் சிறைத் தண்டனை பிரதிவாதிக்கு விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் அறிவித்தார்.
The Colombo High Court Judge, Rashantha Godawela, sentenced a 21-year-old mason worker from Mannar to 10 years of rigorous imprisonment after he was proven guilty of trafficking the drug ‘Ice’ (Crystal Methamphetamine). The individual was arrested on November 3, 2022, near the Eluthur Junction in Mannar while transporting the drug, and the charges against him under the Poisons, Opium, and Dangerous Drugs Ordinance (Act No. 1 of 2008) were proven beyond a reasonable doubt during the trial.