மகிந்த ராஜபக்ச ஆட்சியில் 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட மிஹின் லங்கா விமான சேவையின் நிலுவை நிதி பிரச்சினைகள் தொடர்பாக, இந்த வாரம் விவாதிக்க உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய இந்த விமான சேவை, 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி தனது செயல்பாடுகளை நிறுத்திய பின்னும், அதன் செயற்பாடுகள் காரணமாக ஏற்பட்ட கடன்களை இன்னமும் முடிக்கவில்லை.
நிதி அமைச்சகத்தின் 2024 ஜூன் 30 வரை சமர்ப்பிக்கப்பட்ட ஆண்டு நிதி நிலை அறிக்கையின்படி, மிஹின் லங்கா நிறுவனம் ரூ. 3,201.77 மில்லியன் நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், விரைவில் விசாரணைகள் ஆரம்பமாக உள்ளதாக பிரதி அமைச்சர் உறுதிப்படுத்தியதுடன், தற்போது அரசாங்கம், மிஹின் லங்காவின் தீர்க்கப்படாத நிலையை விட எதிர்வரும் சுற்றுலா பருவத்திற்கான திட்டங்களை முன்னுரிமைப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.