Saturday, January 25, 2025

நாமலின் கல்வி தகைமை குறித்து சிக்கல்: குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டம் தொடர்பான தனது உயர்நிலை கல்வித் தகைமையை மோசடியாக பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான அதிகார சபையின் தலைவர் ஜமுனி காமந்ர துஷாரவினால் இன்று (16.12.2024) குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜமுனி காமந்ர தெரிவித்ததாவது, பரீட்சை நாளன்று நாமல் ராஜபக்ச பரீட்சை முறைகேட்டில் ஈடுபட்டதாக அன்றையதினம் அவருடன் பரீட்சைக்கு தோற்றிய இளைஞர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த இளைஞர் முறைப்பாட்டை அப்போதைய மண்டபத் தலைவர், சட்டக்கல்லூரி அதிபர், மற்றும் பதிவாளர் ஆகிய பொறுப்பதிகாரர்களிடம் பதிவு செய்துள்ளார். முறைப்பாடு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இதன் பின்னர், நீதியமைச்சின் அப்போதைய செயலாளர் சுஹத கம்லத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டபோதும், அது மறுக்கப்பட்டது. மேலும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல துறைகளிலும் முறையிட்டபோதும், தீர்வு கிடைக்கவில்லை.

இந்தச் சூழலில், முறைப்பாட்டை பதிவு செய்த இளைஞர் தனது பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு வெளியேறியதால், உரிய சாட்சியங்களைப் பெற்று விசாரணை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் விரைவாக நடவடிக்கை எடுத்து, முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என ஜமுனி காமந்ர வலியுறுத்தியுள்ளார்.

Hot this week

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

Topics

பாடசாலை ஆரம்பிப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

2024 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட பாடசாலை ஆரம்பிப்பை...

யாழில் பட்டதாரிகள் அனுர அரசுக்கு எச்சரிக்கை!

அதிகக் கல்வித் தகுதி பெற்ற உள்வாரி பட்டதாரிகளுக்கு அரச வேலைவாய்ப்பில் முன்னுரிமை...

ரணிலால் புதிய அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால்: முன்னாள் எம்.பி எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்திற்கு சவால் விடும்...

வடக்கில் படையெடுக்க ஆரம்பித்துள்ள ஆப்பிரிக்க நத்தைகள்; பேராபத்துக்களை சந்திக்கவிருக்கும் இலங்கை

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள், சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர்...

ஆசிரியர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்: மீறினால் உரிய நடவடிக்கை

மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்புகளை நடத்தும் வாய்ப்பைத் தவிர்க்கும் வகையில், ஆசிரியர்களுக்கு புதிய...

“சேர்” என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி

யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன்,...

கொழும்பில் பாலத்திற்கடியில் பச்சிளம் குழந்தை புறக்கணிப்பு: இரக்கமற்ற செயல்

தெமட்டகொட மேம்பாலத்தின் கீழ், ஓரிரு நாட்களான குழந்தையொன்று கைவிடப்பட்ட நிலையில், தகவல்...

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான போக்குவரத்து சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

கொழும்பு-யாழ்ப்பாணம் இடையேயான சில தனியார் பேருந்துகள் பயணிகளிடம் தொடர்ச்சியாக மோசடியில் ஈடுபடுவதாக...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img