Wednesday, November 12, 2025

சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டார்

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு போதைப்பொருள் மற்றும் கைப்பேசிகளை வழங்க உதவியதாகக் குற்றம்சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி ஒருவர் களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய சிறைச்சாலை அதிகாரி எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவருக்கு ஐஸ், ஹெரோயின் மற்றும் கைப்பேசி வழங்குவதற்குத் தயாராக இருந்தபோது, பாணந்துறையின் ஹிரணவைச் சேர்ந்த பெண் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சந்தேக நபரான இந்தச் சிறைச்சாலை அதிகாரி அதற்காக 35,000 ரூபாய் பணத்தைப் பெற்றதாகத் தெரியவந்தது.

இதன் விளைவாக, குற்றம் சாட்டப்பட்ட சிறைச்சாலை அதிகாரி உடனடியாக வவுனியா சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

A 53-year-old Prison Officer from Waskaduwa was arrested by the Kalutara North Police for allegedly assisting a prisoner at the Kalutara Prison to obtain narcotics (Ice and heroin) and mobile phones. The officer was implicated during the interrogation of a woman from Panadura, Hirana, who was arrested yesterday while preparing to deliver the contraband, revealing the officer had received Rs. 35,000 for his assistance; the officer, who was immediately transferred to Vavuniya Prison, will be produced before the Kalutara Magistrate’s Court, and further investigations are underway.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img