நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்பின்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மி.மீ. வரையிலான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என்றும் திணைக்களம் எதிர்பார்க்கிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
The Department of Meteorology has forecast rain or thundershowers in most parts of the country after 1:00 PM, with heavy rainfall up to about 100 mm expected in some areas of the Western, Sabaragamuwa, Central, North Western, and Uva provinces, along with the Galle and Matara districts. Rain is also likely during the mornings in the Western and Southern provinces, and misty conditions are expected in the Central, Sabaragamuwa, and Uva provinces in the mornings. The public has been advised to take necessary precautions against potential damage from strong winds and lightning during thundershowers.


