யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நேற்று (13) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் 18 வயதான இளைஞன் ஆவார்.
பொலிஸார் விசாரணை
நேற்று சுமார் ஐந்து இளைஞர்கள் அப்பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றில் நீராடச் சென்றுள்ளனர். இதன்போது அவர்கள் அனைவரும் கயிறு கட்டிக்கொண்டு நீராடியுள்ளனர். நீராடிய பின்னர் அனைவரும் கிணற்றில் இருந்து வெளியேறிய நிலையில், ஒருவர் மட்டும் தொடர்ந்து குளித்துக் கொண்டிருந்தார்.

அவரை வருமாறு ஏனைய நண்பர்கள் அழைத்துள்ளனர். எனினும், குறித்த இளைஞன் ‘சிறிது நேரத்திற்குப் பிறகு வருவதாக’ அவர்களிடம் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் அந்த இளைஞனைக் காணாததால், மற்றவர்கள் மீண்டும் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு அறுந்த நிலையில் இளைஞன் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
பின்னர், ஏனைய நண்பர்கள் அப்பகுதி மக்களின் உதவியுடன் தோட்டக் கிணற்றில் தேடியபோது அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த இளைஞனின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.
An 18-year-old youth was recovered dead from a well in Kommarthurai, VVT Police Division, Jaffna, yesterday (13). The incident occurred when a group of five youths went to swim in a garden well, initially using ropes. After the others left, the victim chose to continue swimming alone. When his friends returned after a long absence, they found his rope broken and the youth missing, leading to the discovery of his body in the well with the help of locals. The body has been taken to Point Pedro Base Hospital, and the VVT Police are conducting further investigations.


