Friday, December 5, 2025

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு கிரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் ககன்ராவ் (வயது 29). இவர் ஒரு வங்கியில் ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மேகனா ஜாதவ். இவர்களுக்குக் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

 

குடும்பத் தகராறு

இந்த புதுமணத் தம்பதியின் வாழ்க்கையில் சமீப காலமாகக் குடும்பத் தகராறுகள் தலை தூக்கத் தொடங்கின. அதாவது, மனைவி மேகனா ஜாதவ், தன் கணவரிடம் எந்தக் காரணமுமின்றி அடிக்கடி சண்டை பிடித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தத் தகராறு நாளுக்கு நாள் அதிகரித்ததால், புதுமாப்பிள்ளை ககன்ராவ் தனது வாழ்க்கையில் விரக்தி அடைந்து காணப்பட்டார். நேற்று முன்தினமும், ககன்ராவிடம் அவரது மனைவி சண்டை போட்டுள்ளார்.

இதனால் மனமுடைந்த ககன்ராவ், தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி, அவர் தனது வீட்டில் உள்ள படுக்கை அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதைக் கேள்விப்பட்ட ககன்ராவின் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

சம்பவம் பற்றித் தகவல் அறிந்ததும் பொலிஸார் உடனடியாக விரைந்து வந்து, தற்கொலை செய்த ககன்ராவின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இந்தத் தற்கொலை தொடர்பாகக் ககன்ராவின் சகோதரி, கிரிநகர் பொலிஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதன்பேரில் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி அளித்த தொல்லையின் காரணமாகப் புதுமாப்பிள்ளை திருமணமான 8 மாதங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட இந்தச் சம்பவம் அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

A 29-year-old bank employee named Gagan Rao from Girinagar, Bangalore, committed suicide by hanging himself at his home just eight months after getting married, a tragedy that has caused widespread shock. The man’s sister filed a complaint with the Girinagar Police, alleging that his wife, Meghna Jadhav, frequently instigated arguments without cause, leading Gagan Rao to become deeply frustrated with life. Following the latest argument, the distraught husband took his own life. Police have registered a case and are conducting a thorough investigation into the incident.

download mobile app

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img