Friday, November 14, 2025

நடு வீதியில் துயரமான முடிவு; பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு!

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், டிப்பர் லொறி மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு.

கொழும்பிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலத்த காயமடைந்து வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர், வரக்காபொல, மஹேனகமவைச் சேர்ந்த 33 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் எனத் தெரியவந்துள்ளது. அவரது சடலம் தற்போது வத்துபிட்டிவல வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லொறியின் சாரதி, பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

____________________________________________________________________

A Police Constable, aged 33 and hailing from Warakapola, has died in an accident after a tipper truck travelling from Colombo to Kandy collided with his motorcycle near the Nambuluwa Junction on the Colombo-Kandy main road. The seriously injured motorcycle rider was admitted to Wathupitiwala Hospital but succumbed to his injuries. The tipper lorry driver has been arrested, and Nittambuwa Police are conducting further investigations.

Hot this week

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிய வாகனம் தப்பியது!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ஆவது...

உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்!

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு,...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் 2 பேர் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை வாய்ப்பு!

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Topics

யாழில் நண்பர்களுடன் சென்ற 18 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொம்மாந்துறையில் உள்ள தோட்டக் கிணற்றில்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுனரை மோதிய வாகனம் தப்பியது!

கொழும்பு - கண்டி பிரதான வீதியில், வரகாபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 36ஆவது...

உலக நீரிழிவு தினத்தையொட்டி இலவச மருத்துவ முகாம்!

2025 ஆம் ஆண்டு உலக நீரிழிவு தினத்தை (நவம்பர் 14) முன்னிட்டு,...

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு; மேலும் 2 பேர் கைது!

கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் அண்மையில் ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டில்,...

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை வாய்ப்பு!

இலங்கைக்குக் கிழக்கே கீழ் வளிமண்டலத்தில் குழப்பமான நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Vacancy Customer Relationship Officer

🌿💼 பல்லுயிர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 💼🌿 வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🔥 நாங்கள் தற்போது...

மருத்துவமனையில் காதல் ஜோடியின் வீடியோ சர்ச்சை!

மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக...

தொலைபேசி பயன்பாடு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது!

தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்து...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img