Wednesday, November 12, 2025

2 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் இருவர் கைது!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரின் நெருங்கிய சகாக்கள் என்று கூறப்படும் இரண்டு சந்தேகநபர்கள், 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லியவத்தை பிரதேசத்தில் வத்தளைப் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் கிடைத்த தகவலின் பேரில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு, 1 கிலோ 48 கிராம் ‘ஐஸ்’ (Crystal Methamphetamine) போதைப்பொருளை வைத்திருந்த ஒரு சந்தேகநபரை முதலில் கைது செய்தனர்.

இந்தச் சந்தேகநபர் 23 வயதுடைய பல்லியவத்தை, ஹெந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்தச் சந்தேகநபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் மூலம் தெரியவந்த தகவலின் அடிப்படையில், வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோனி மாவத்தை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்று சோதனை செய்யப்பட்டு, 797 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சந்தேகநபர் 28 வயதான ஹெந்தலை, வத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வத்தளைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


 

Two suspects, reported to be close associates of a major drug trafficker currently in police custody, have been arrested with ‘Ice’ (Crystal Methamphetamine) valued at over Rs. 20 million (2 Crores).

  1. Police first arrested a 23-year-old male suspect from Palliyawatta, Hendala, in the Palliyawatta area (Wattala Police Division) with 1 kilogram and 48 grams of ‘Ice’.
  2. Based on information obtained from the first suspect, police raided a house in the Donnie Mawatha area (Wattala Police Division) and arrested a second suspect, a 28-year-old man from Hendala, Wattala, with 797 grams of ‘Ice’.

The total seized quantity of ‘Ice’ is approximately 1.845 kg. Wattala Police are conducting further investigations.

Hot this week

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

Topics

Vacancy Tailors Female

*👉உடனடி வேலைவாய்ப்பு 🔰 நீங்கள் ஓர் நிரந்தர வேலையை தேடுகிறீர்களா ⁉⁉ ♦இதோ உங்களுக்கான...

மதிய உணவில் புழுக்கள்; தமிழர் பகுதி உணவகத்திற்கு வழக்கு!

முல்லைத்தீவில் உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட உணவில் புழுக்கள் இருந்த சம்பவம் ஒன்று...

திருகோணமலையில் சிசுவின் மரணத்தை மறைத்த பெற்றோர்

திருகோணமலை முத்து நகர் பகுதியில் 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில்...

திருமணத்திற்கு 8 மாதத்தில் அரங்கேறிய சோகம்

திருமணமான 8 மாதங்களில் ஆணொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை...

பரீட்சைக்கு தயாராகும் மாணவிக்கு தந்தை செய்த மோசமான செயல்

உயர்தரப் பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனது மகளின் பாடப்புத்தகங்கள் மற்றும் உடைகளை...

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள்; பெண்களுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!

சமூக வலைத்தளங்களில் பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலிப் பக்கங்களை உருவாக்கி, அதன்...

யாழில் யுவதி மர்ம மரணம்; தாய்மாமன் கைது!

யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் அவரது...

A/L பரீட்சை அழுத்தம்; கொழும்பு மாணவி தற்கொலை முயற்சி!

கொழும்பு பம்பலப்பிட்டி மகளிர் கல்லூரியின் A/L பரீட்சையில் தோற்றும் மாணவி ஒருவர்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img