தொழில் தேடி அலையும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கான போட்டிப் பரீட்சை விரைவில் நடத்தப்படும் எனவும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான நீதிமன்ற வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. விசாரணை முடிவடைந்ததும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் கோரும் பட்டதாரிகளின் ஒன்றிணைந்த சங்கப் பிரதிநிதிகளுக்கும், பிரதமர் ஹரினி அமரசூரியவிற்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இந்த விடயங்கள் பேசப்பட்டுள்ளன.
இதன்போது, பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளும்போது, விண்ணப்பதாரர்களின் வயது எல்லையை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வயது எல்லையை நீட்டித்து, தற்போது ஆசிரியர் சேவையில் உள்ள அனைத்து வெற்றிடங்களையும் நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
The Ministry of Education, Higher Education, and Vocational Education has announced that measures are being taken to recruit unemployed graduates into the teaching service. A competitive examination for this purpose will be held soon, following the conclusion of a related court case. During a discussion between the representatives of the Unemployed Graduates’ Association and Prime Minister Harini Amarasuriya, it was decided to extend the age limit for applicants to fill all vacant teaching positions.