ஆடைத் தொழிற்சாலை நடத்துவதுபோல நடித்து, கோடிக்கணக்கான பெறுமதியான போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட இருவரை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், இரத்மலானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர்கள் இருவரும் பிடிபட்டனர்.
அவர்களிடமிருந்து ஒரு கிலோ 5 கிராம் ஹேஷ் போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டிய ஒரு இலட்சம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட ஹேஷ் போதைப்பொருளின் மதிப்பு ஒரு கோடி ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Two individuals were arrested for operating a large-scale drug trafficking business under the guise of a clothing factory in Ratmalana. Police seized 1 kilogram and 5 grams of hashish, valued at 10 million rupees, and 100,000 rupees in cash from the suspects. The investigation is ongoing.