இலங்கையின் முன்னணி பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஐந்து ஆண்களும் ஒரு பெண்ணும் இந்தோனேசியாவின் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்தக் குழுவில், ‘கெஹல்பத்தர பத்மே’, ‘கமாண்டோ சலிந்த’, ‘பாணந்துரை நிலங்க’, ‘பெக்கோ சமன்’ மற்றும் ‘தெம்பிலி லஹிரு’ ஆகிய புனைப்பெயர்களைக் கொண்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், ‘பெக்கோ சமனின்’ மனைவி மற்றும் அவர்களது மூன்று வயது குழந்தையும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழுவும், ஜகார்த்தா பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் குறிப்பிட்டுள்ளார்.
Five men and one woman belonging to a prominent Sri Lankan underworld gang have been arrested by Indonesian security forces. The arrested individuals include well-known figures with nicknames such as ‘Kehelpathara Padme’ and ‘Commando Salinda,’ along with ‘Peko Saman’s’ wife and their three-year-old child. The arrests were made during a joint operation by the Sri Lankan Criminal Investigation Department and the Jakarta Police.


