சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் சிறிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலத்த காற்றினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சூரியனின் தென்திசை நோக்கிய நகர்வு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் திகதி முதல் செப்டம்பர் 7-ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் சில பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி, இன்று (01) நண்பகல் 12.10 அளவில் முதலைப்பாலை, பலகொல்லாகம, ராஜாங்கனை, எப்பாவல, மெதிரிகிரிய, பள்ளித்திடல் மற்றும் வாகரை ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
The Department of Meteorology forecasts rain for several areas in Sri Lanka, including the Sabaragamuwa province and the Kandy and Nuwara Eliya districts. The Western and Northwestern provinces, along with the Galle and Matara districts, may experience light rain. Thunderstorms are expected in the Uva province and the Ampara and Batticaloa districts after 2 PM. Additionally, strong winds are predicted for the western slopes of the central hills and other regions. The sun will be directly overhead in specific locations, including Muthalaipalai and Vakarai, at noon today.