வளிமண்டலவியல் திணைக்களத்தின் தகவல்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள், அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று (4) சிறிதளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் மற்ற பகுதிகளில் வானிலை சீராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகள், வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.
சூரியனின் தென்திசை நோக்கிய நகர்வு காரணமாக, கடந்த ஆகஸ்ட் 28ஆம் திகதி முதல் செப்டம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கையின் சில அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
அதன்படி, இன்று (4) நண்பகல் 12.09 மணியளவில் ராகம, கிரிந்திவெல, ருவன்வெல்ல, நாவலப்பிட்டி மற்றும் லுணுகல ஆகிய பகுதிகளுக்கு மேலாகச் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.
The Department of Meteorology has forecast a chance of light rain today in the Western and Sabaragamuwa provinces, as well as in the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Ampara, Batticaloa, and Monaragala districts may experience thunderstorms after 2 PM, while other parts of the country are expected to have fair weather. Strong winds of 30-40 km/h are also anticipated in the western slopes of the central hills, North Central, and Northwestern provinces, and the Hambantota district. Additionally, the sun will be directly overhead areas like Ragama, Ruwanwella, and Nawalapitiya at 12:09 PM today.