Tuesday, September 9, 2025

இலஞ்சம் பெற்ற 49 பேர் கைது!

இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் தகவல்படி, இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், இலஞ்சம் பெற்ற சம்பவங்களுடன் தொடர்புடைய 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு 3,937 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் 72 சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 39 சுற்றிவளைப்புகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

அதிகம் இலஞ்சம் பெற்ற சம்பவங்கள் பொலிஸ் திணைக்களத்தில் பதிவாகியுள்ளதாகவும், இதுவரை 17 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சு, சுகாதார அமைச்சு, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், இலங்கை போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற அரச நிறுவனங்களில் பணியாற்றியவர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களில் இலஞ்ச வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 27 பேரை நீதிமன்றங்கள் குற்றவாளிகளாக அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The Bribery and Corruption Investigation Commission has reported that 49 people were arrested for bribery-related offenses in the first seven months of this year. During this period, the commission received 3,937 complaints, leading to 72 raids, 39 of which were successful. The highest number of bribery incidents were recorded in the police department, with 17 officers arrested. Other government institutions involved include the Ministries of Justice and Health, the Immigration and Emigration Department, the Sri Lanka Transport Commission, and various divisional secretariats. The report also notes that 27 individuals have been found guilty in bribery cases during this period.

Hot this week

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Topics

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

யாழ்ப்பாணத்தில் சகோதரனுக்கு உதவச் சென்றவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img