Tuesday, October 14, 2025

குளியாப்பிட்டிய விபத்து; சாரதி விளக்கமறியலில்!

குளியாப்பிட்டி, விலபொல சந்தியில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூன்று பேரின் உயிரிழப்புக்குக் காரணமான விபத்து தொடர்பாகக் கைது செய்யப்பட்ட டிப்பர் வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

நேற்று (27) காலை விலபொல சந்தியில் உள்ள பல்லேவெல பாலத்தில் டிப்பர் வாகனமும் பாடசாலை வேனும் மோதியதில் ஏற்பட்ட இந்த விபத்தில், மூன்று பேர் உயிரிழந்ததோடு, 13 பாடசாலை மாணவிகள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் குளியாப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதி, இன்று குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது, நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரான சாரதியை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன், குறித்த சாரதி 24 மணி நேரத்திற்கும் மேலாகத் தூக்கமின்றி வாகனம் ஓட்டியுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதனடிப்படையில், எதிர்காலத்தில் குறித்த டிப்பர் வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராகத் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

The driver of a tipper truck involved in a fatal accident in Kuliyapitiya, which killed three people, including two schoolgirls, has been remanded until September 8. The accident occurred when the tipper truck collided with a school van, injuring 13 other students. Police informed the court that the driver had been driving for over 24 hours without sleep, and a court order has been issued to take legal action against the truck’s owner as well.

Hot this week

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

Topics

Vacancy Data entry operator

LCP DISTRIBUTOR Data entry operator (female) computer knowledge in excel and...

Vacancy Delivery Boy

LCP DISTRIBUTOR Delivery Boy vacancy available No bike needed Age below 35 Salary...

கொழும்பிலிருந்து இந்தியா சென்ற இலங்கையர் மேற்கொண்ட மோசமான செயல்

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை ஒன்றில் இலங்கையர் ஒருவர் கைது...

Vacancy Admin Assistant

🚨 WE’RE HIRING! 🚨 Are you looking to start or...

யாழ்தேவி ரயில் மோதி குடும்பஸ்தர் உயிரிழப்பு; துயரில் உறைந்த குடும்பம்

பளை - இத்தாவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதுண்டதில் சாரதி...

காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு; மாமனாரின் தாக்குதலில் மருமகன் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32)....

பல அரச நிறுவனங்களின் ஆன்லைன் சேவைகள் தடைபட்டது

இலங்கை அரச மேகக்கணிமை (Lanka Government Cloud - LGC) சேவையில்...

நாளை முதல் இலங்கை வரும் வெளிநாட்டினருக்கு ETA கட்டாயம்

இலங்கைக்கு வருகை தரும் அனைத்து வெளிநாட்டினரும், நாட்டிற்குள் நுழைவதற்கு முன் மின்னணு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img