கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த 16 வயதுச் சிறுமி ஒருவர், எட்டு மாத கர்ப்பிணியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வயிற்று வலியால் அவதிப்பட்ட அச்சிறுமியை அவளது தாய் பிரியப்பட்டணா அரசு வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமியைப் பரிசோதித்த வைத்தியர்கள், அவள் 8 மாத கர்ப்பிணியாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து, அவளது தாயிடம் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியடைந்த தாய், மகளிடம் விசாரித்தபோது, கடந்த ஒரு வருடமாக அவளது தந்தையே அவளைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, வைத்தியர்கள் பெட்டதபுராப் பொலிஸாருக்குத் தகவல் அளித்துள்ளனர். பொலிஸார் வந்து சிறுமியிடம் விசாரணை நடத்தி, அவளது தந்தையைக் கைது செய்தனர்.
பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
A 16-year-old girl in the Bettadapura police station area of Mysuru, Karnataka, was found to be eight months pregnant after her mother took her to a government hospital for a stomach ache. The mother was shocked to learn that her daughter had been sexually assaulted by her own father for the past year. The hospital staff alerted the police, who arrested the girl’s father. He was then presented in court and remanded to prison. The incident has caused a stir in the community.