ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் மூன்றாம் கட்டப் பணிகளை காலை 10 மணிக்குத் தொடங்கி வைக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, காலை 11 மணிக்கு குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்தியக் காரியாலயத்தை யாழ்ப்பாணச் செயலகப் பிரிவில் ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கவுள்ளார்.
பின்னர், பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நடைபெறும் விசேட நிகழ்விலும் கலந்துகொண்டு, நூலகத்தின் அபிவிருத்திப் பணிகளையும் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கிறார்.
அதைத் தொடர்ந்து, பிற்பகல் 3 மணிக்கு யாழ்ப்பாணம் மண்டைதீவுப் பகுதியில் அமைக்கப்படவுள்ள புதிய கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகளையும் ஜனாதிபதி ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
நாளை செவ்வாய்க்கிழமை (2) முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்புக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி, ‘தென்னை தினம்’ அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதுடன், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்துக்கான அடிக்கல்லையும் நாட்டவுள்ளார். அத்துடன், பளைப் பகுதியில் தென்னை நாற்று உற்பத்தி நிலையத்தையும் திறந்து வைக்கவுள்ளார்.
President Anura Kumara Dissanayake is visiting the Northern Province today, with a series of development projects scheduled for inauguration. The day’s events include launching the third phase of the Myliddy fisheries harbour, opening the Jaffna regional office of the Department of Immigration and Emigration, and initiating development work at the Jaffna Public Library and the new cricket stadium in Mandaitivu. On Tuesday, the president will visit Mullaitivu to launch a ‘Coconut Day’ development project, lay the foundation stone for the Vattuvakal bridge, and open a coconut sapling production centre in Pallai.