திருகோணமலைப் பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறக்ககக் கண்டி கடல் பகுதியில் நேற்று (21) பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் குச்சவெளி, இறக்ககக் கண்டி, வாழை ஊத்து பகுதியைச் சேர்ந்த என். அப்சான் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அப்சானின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனையின் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.