Thursday, November 13, 2025

திருமணமான பெண் வீட்டை விட்டு ஓட்டம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில், திருமணமான ஒரு பெண், கடந்த ஓராண்டில் தனது கணவரை விட்டு 10 முறை காதலனுடன் ஓடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்ராம் என்பவர், ஒரு வருடத்திற்கு முன்பு மேகா என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில நாட்களிலேயே, மேகா அதே பகுதியைச் சேர்ந்த தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவிட்டார்.

ஊர் பெரியவர்களின் வற்புறுத்தலினால், சுக்ராம் மனைவியைத் தேடிச் சென்று மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால், மேகா தொடர்ந்து வீட்டில் இருக்காமல், கடந்த ஓராண்டில் மட்டும் தனது காதலனுடன் 9 முறை ஓடிவிட்டார்.

கடைசியாக, 8 நாட்களுக்கு முன்பு மீண்டும் காதலனுடன் ஓடிவிட்டதால் சுக்ராம் நேரடியாகப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

தனது மனைவி மீது எந்த வழக்கும் பதிவு செய்ய வேண்டாம் என்றும், அவரைத் தன்னுடன் அனுப்பி வைத்தால் போதும் என்றும் சுக்ராம் கேட்டார். பொலிஸார் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து மீண்டும் சுக்ராமிடம் ஒப்படைத்தனர்.

ஆனால், அடுத்த நாளே மேகா மீண்டும் தனது காதலன் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, சுக்ராம் கிராம பஞ்சாயத்தைக் கூட்டி தனது பிரச்சினையைத் தெரிவித்தார். பஞ்சாயத்தார் மேகாவை வரவழைத்து, கணவனுடன் வாழும்படி கேட்டுக்கொண்டனர். ஆனால், மேகா அதற்குச் சம்மதிக்கவில்லை. சுக்ராம் தனது மனைவி தன்னுடன் வரவேண்டும் என பிடிவாதமாக இருந்ததால், பஞ்சாயத்தார் குழப்பமடைந்தனர்.

அப்போது, அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், மேகாவே ஒரு முடிவை அறிவித்தார். அதாவது, ஒரு மாதத்தில் 15 நாள் கணவன் வீட்டிலும், 15 நாள் காதலன் வீட்டிலும் மாறி மாறி வாழ்வதாகக் கூறினார்.

இந்த முடிவைக் கேட்டு பஞ்சாயத்தில் இருந்த பெரியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே நேரத்தில், அதிர்ச்சியில் உறைந்துபோன சுக்ராம், “எனது மனைவி அவளது காதலனுடனேயே வாழட்டும், எனக்கு வேண்டாம்” என்று கூறிவிட்டார்.

In a bizarre incident from Uttar Pradesh, India, a woman who had run away from her husband ten times in a year announced a unique arrangement to her husband and the village council: she would live with her husband for 15 days and with her lover for the remaining 15 days of the month. The husband, who had been repeatedly bringing her back, was so stunned by her proposition that he gave up and decided to let her live with her lover.

Hot this week

Vacancy Customer Relationship Officer

🌿💼 பல்லுயிர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 💼🌿 வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🔥 நாங்கள் தற்போது...

மருத்துவமனையில் காதல் ஜோடியின் வீடியோ சர்ச்சை!

மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக...

தொலைபேசி பயன்பாடு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது!

தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்து...

HIV பாதித்த மகனை கொன்று தாய் தற்கொலை ; தொழிலதிபர் வீட்டில் சம்பவம்!

ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனைக் கொன்று தாயும்...

வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுப்பு!

வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில்...

Topics

Vacancy Customer Relationship Officer

🌿💼 பல்லுயிர் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு! 💼🌿 வாய்ப்பை தவறவிடாதீர்கள்! 🔥 நாங்கள் தற்போது...

மருத்துவமனையில் காதல் ஜோடியின் வீடியோ சர்ச்சை!

மத்தியப் பிரதேசத்தின் அசோக்நகர் மாவட்ட மருத்துவமனை வளாகத்தில், சில ஜோடிகள் அநாகரிக...

தொலைபேசி பயன்பாடு நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது!

தொலைக்காட்சி மற்றும் தொலைபேசி பயன்பாட்டால் இளம் பருவத்தினரிடையே நீரிழிவு நோய் அதிகரித்து...

HIV பாதித்த மகனை கொன்று தாய் தற்கொலை ; தொழிலதிபர் வீட்டில் சம்பவம்!

ஓசூரில் எச்.ஐ.வி. தொற்றால் பாதித்த 9 வயது மகனைக் கொன்று தாயும்...

வவுனியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுப்பு!

வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில்...

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பெருமளவு கேரள கஞ்சா மீட்பு!

கிளிநொச்சி - பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில்...

கிரிந்தவில் போதைப்பொருளுடன் கைது; சந்தேகநபர்கள் தடுப்பு காவலில்!

கிரிந்த பகுதியில் பெருமளவான 'ஐஸ்' ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 8...

இலங்கையில் வைத்தியர்களை வியப்பில் ஆழ்த்திய இரட்டைக் குழந்தைகள்

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்)...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img