இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் டாக்டர் சூரஜ் பெரேரா தெரிவித்தார். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடந்த ஊடகச் சந்திப்பில் டாக்டர் சூரஜ் பெரேரா கூறியதாவது:
“2022-ஆம் ஆண்டில், 904 குழந்தைகளுக்குப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாகக் குழந்தை புற்றுநோய்களின் எண்ணிக்கையில் பெரிய அதிகரிப்பு இல்லை.
சராசரியாக, ஆண்டுக்கு 600 முதல் 800 வரை இருந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 900 ஆக உயர்ந்துள்ளது. 2019 முதல், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 200 குழந்தைகள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருந்தும், சில நோயாளிகள் தாமதமாகவே கண்டறியப்படுகின்றனர். சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதன் மூலம் இந்த உயிரிழப்புகளை மேலும் குறைக்கலாம்.”
According to Dr. Suraj Perera, a Community Health Specialist from the National Cancer Control Programme, around 200 children die from cancer annually in Sri Lanka. Speaking at a press conference, he stated that while the number of child cancer cases has remained steady over the past 15 years, there’s been a slight increase to about 900 cases in 2022. Dr. Perera emphasized that these deaths could be reduced with proper and timely medical treatment, as some cases are diagnosed too late despite high cure rates.