பொலன்னறுவை, அரலகங்வில, கனிவியாகல பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகங்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (31) மாலை இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் அரலகங்வில பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மரக்குற்றிகளை எடுப்பதற்காகக் காட்டுப் பகுதிக்குச் சென்றபோதே, அவர் காட்டு யானையின் தாக்குதலுக்கு உள்ளானதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
A 67-year-old man from the Aralaganwila area in Polonnaruwa was killed in a wild elephant attack. According to Aralaganwila police, the incident occurred on Sunday evening when the man entered the jungle to collect firewood.