2025 ஆகஸ்ட் 25 அன்று மாலை 5:00 மணிக்கு (மாஸ்கோ நேரம்) ரஷியாவின் குர்ஷ்க் பகுதியில் உள்ள அணுமின் நிலையம் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில், அணுமின் நிலையத்தின் ஒரு பகுதி எரிந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
இந்தத் தாக்குதலில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என ரஷியா தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் இன்னும் பொறுப்பேற்கவில்லை.
கடந்த மூன்று நாட்களாக தெற்கு ரஷியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உக்ரைன் டிரோன் தாக்குதலில் எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
ரஷியா-உக்ரைன் போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்கா உட்பட பல நாடுகள் முயற்சித்தும், இதுவரை தோல்வியையே சந்தித்துள்ளன. இந்தத் தாக்குதல், போரின் பதற்றத்தை மேலும் அதிகரிப்பதாக உள்ளது.