பொரளையில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து, அங்குப் பணிபுரியும் மூன்று பெண்களைப் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டுத் தப்பிச் சென்ற இரு கான்ஸ்டபிள்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தன்று, இவர்கள் மசாஜ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, பெண் மேலாளர் மற்றும் நான்கு பெண்களை அச்சுறுத்தி, அவர்களில் மூன்று பெண்களைப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக, பொலிஸ் விசேட பணியகத் தலைமையகத்தில் பணியாற்றும் ஒரு கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
தப்பிச்செல்ல முயன்றபோது, மேல் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில், அவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டதாகப் பொரளைப் பொலிஸார் தெரிவித்தனர். தற்போது, அவர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விசாரணையில், இந்தச் சந்தேகநபர் ஏற்கனவே பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளைப் பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவு இணைந்து மேற்கொண்டு வருகின்றன.
One of two police officers who allegedly broke into a massage parlor in Borella and sexually assaulted three women has been arrested. The suspect, a constable who had been dismissed from the police service, was apprehended after he fell from a building while trying to escape. He is currently receiving treatment at the Colombo National Hospital under police guard. Borella police and the Colombo South Criminal Investigation Division are conducting further investigations.