Thursday, September 4, 2025

மட்டன் குருமா செய்வது எப்படி?

மட்டன் குருமா சாதத்துக்கும் ரொட்டிக்கும் ஏற்ற ஒரு சைட் டிஷ். இதனை எப்படி எளிமையாகவும் சுவையாகவும் செய்யலாம் என்று பார்க்கலாம். இதில் வெங்காயம், தக்காளி, மசாலா கலவைகளைச் சேர்த்து செய்வதால் இதன் சுவை சற்று அதிகமாகவே இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – அரை கிலோ
  • தயிர் – 1 கப்
  • இஞ்சி விழுது – 3 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
  • பொரித்த வெங்காயம் – 1 கப்
  • கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • பட்டை – 2
  • பிரியாணி இலை – 2
  • ஏலக்காய் – 6
  • கிராம்பு – 6
  • கருப்பு ஏலக்காய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

படி 1: முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மட்டனை 5 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும்.

படி 2: அடுத்து, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், சிறிதளவு கரம் மசாலா, அரை கப் வெங்காயம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.

படி 3: பின்பு, ஊற வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். மட்டன் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கலவை கொதித்து வந்ததும் குக்கரை மூடி வைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரும்வரை வேக வைத்து, விசில் அடங்கியதும் குக்கரைத் திறக்கவும்.

படி 4: அவ்வளவுதான்! சுவையான மட்டன் குருமா தயார். இதனைச் சாதம், ரொட்டி, இட்லி, தோசை என எதனுடன் சேர்த்துச் சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.

Hot this week

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக்...

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ்...

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம் வெளியானது!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானதைத் தொடர்ந்து,...

யாழ்ப்பாணத்தில் பச்சிளம் சிசு திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிறந்து வெறும் ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது....

Topics

போலி இலக்கத் தகடுடன் கார் ஓட்டிய பெண் வைத்தியர் கைது!

கண்டி நகரில், போலி இலக்கத் தகடுகள் பொருத்தப்பட்ட கார் ஒன்றை ஓட்டி...

52 வயது காதலிக்கு 26 வயது காதலன் செய்த கொடூரம்!

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மெயின்புரி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் தன்னை இளமையாகக்...

சொந்த மகளையே கர்ப்பமாக்கிய தந்தை; பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய கொடூர சம்பவம்!

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், பிரியப்பட்டணா தாலுகாவில் உள்ள பெட்டதபுரா பொலிஸ்...

புலமைப்பரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளி குறித்த விபரம் வெளியானது!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று நள்ளிரவு வெளியானதைத் தொடர்ந்து,...

யாழ்ப்பாணத்தில் பச்சிளம் சிசு திடீர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் பிறந்து வெறும் ஐந்து நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது....

பட்டம் விட்டு விளையாடிய 7 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபத்து!

யாழ்ப்பாணம், சுன்னாகம் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் ஒருவன்,...

மீண்டும் டெங்கு வைரஸ் தீவிரமடைந்துள்ளது!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில், இலங்கை முழுவதும் 36,708 டெங்கு...

முன்னாள் போராளி சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img