மட்டக்களப்பு மண்டூர் முருகன் ஆலயத்தில், 20 ஆயிரம் ரூபா பணப்பையைத் திருடியதாக ஒரு பெண் ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்யப்பட்டதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் பெரிய வயதுடைய பெண் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மண்டூர் முருகன் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பணப்பையைத் திருடிய பெண்ணை ஆலயப் பகுதியிலேயே சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.
திருட்டுப்போன கைப்பையையும், அதிலிருந்த 20 ஆயிரம் ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர். அத்தோடு, கைது செய்யப்பட்ட பெண்ணிடமிருந்து மேலதிகமாக 65 ஆயிரம் ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 39 வயதான பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
A woman was arrested by the Vellaveli police for stealing a purse containing 20,000 rupees from a devotee at the Mandur Murugan Temple in Batticaloa. Police recovered the stolen purse and money, along with an additional 65,000 rupees from the suspect. The 39-year-old woman from Periya Poratheevu has been remanded to appear in court as police continue their investigation.