Thursday, August 21, 2025

மனைவியை சித்திரவதை செய்த ஆசிரியர் கைது!

உத்தரபிரதேச மாநிலம், காசியாபாத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான ஷிவம் உஜ்வால் என்பவர், தனது மனைவி ஷானவியை நடிகை நோரா ஃபதேகி போல உடல் கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று கூறி சித்திரவதை செய்துள்ளார்.

திருமணமான நாள் முதல் ஷானவியை தினமும் மூன்று மணி நேரம் உடற்பயிற்சி செய்யக் கட்டாயப்படுத்தியுள்ளார். உடல்நலம் சரியில்லாத நாட்களில் உடற்பயிற்சி செய்யத் தவறினால், அவருக்கு உணவு கொடுக்காமல் பட்டினி போட்டுள்ளார். மேலும், ஆபாசப் படங்களில் வருவதுபோல நடந்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். மனைவி மறுத்தால், கையில் கிடைத்த பொருள்களால் அடித்து துன்புறுத்தியுள்ளார். கணவரின் இந்தக் கொடுமைகளுடன், மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.

சகித்துக் கொள்ள முடியாமல் வீட்டை விட்டு வெளியேறிய ஷானவி, பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளார். பெற்றோர் அவரைச் சமாதானப்படுத்தி மீண்டும் கணவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால், வரதட்சணை கொண்டு வந்தால் மட்டுமே வீட்டிற்குள் அனுமதிப்போம் எனக் கூறி கணவரும் அவரது குடும்பத்தினரும் ஷானவியை விரட்டிவிட்டுள்ளனர்.

ஏற்கனவே ₹24 லட்சம் மதிப்புள்ள கார் மற்றும் ₹10 லட்சம் ரொக்கம் வரதட்சணையாகக் கொடுத்தும், மேலும் பணம், நகை கேட்டு மாமியார் துன்புறுத்துவதாக ஷானவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Hot this week

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்! கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும்...

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

விமான சேவைகளில் மோசடி ! பொதுமக்களின் ஆலோசனை வேண்டும்.

விமான சேவைகளில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி...

Topics

அதிகரித்து வரும் வீதி விபத்துகள்! கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் தாயகப் பகுதிகளில் வீதி விபத்துகளால் ஏற்படும்...

வவுனியா நெடுங்கேணி வீதியில் சடலம் மீட்பு!

வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் முல்லைத்தீவு பிரதான வீதிக்கரையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம்...

புதையல் வேட்டையில் பொலிஸார் அதிகாரியின் மனைவி!

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் புதையல்...

முச்சக்கர வண்டி சாரதிக்கு மரண தண்டனை!

கொழும்பில் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒருவரை கத்தியால் குத்தி கொலை...

விமான சேவைகளில் மோசடி ! பொதுமக்களின் ஆலோசனை வேண்டும்.

விமான சேவைகளில் நடந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரிக்க, ஜனாதிபதி...

தனியாக வசித்த தாய்க்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சியில் மகன்!

குருணாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுனுகொலே பிரதேசத்தில், தனியாக வசித்து வந்த...

நண்பியை மிரட்டிய இளைஞருக்கு நீதிமன்ற தீர்ப்பு!

பெண்ணின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவதாக மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டு,...

work financial adviser

🔰 *முழுநேர வேலைவாய்ப்பு* 🔰 *முன்னணி காப்புறுதி நிறுவனத்தில் நெல்லியடி, யாழ்ப்பாணம், சாவகச்சேரி...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img