முல்லைத்தீவு, ஒட்டுசுட்டானில் வசித்து வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த போராளியான மகேந்தி என அழைக்கப்படும் இராமப்பிள்ளை கமலராசா, நேற்று (2) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் தனது வீட்டிற்கு முன்னால் உள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்ற மகேந்தி, பிற்காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Mahendi, a senior LTTE cadre also known as Ramapillai Kamalarasa, was found dead in a suspected suicide yesterday (September 2) in Oddusuddan, Mullaitivu. He was found hanging from a jackfruit tree in front of his house. Mahendi, who trained in India and held a key position within the LTTE, was transferred to Jaffna Teaching Hospital for an autopsy.