Tuesday, September 9, 2025

வித்தியா கொலை வழக்கு; இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவத்தின் அதிர்ச்சித் தகவல்கள்!

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர். இந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தற்போது தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்களை வரும் நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகளான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கில் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையும், தமிழ் மொழிபெயர்ப்பைப் பெற நான்கரை ஆண்டுகள் ஆனதையும் சுட்டிக்காட்டினார். எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு விரைவான ஒரு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.

அதனடிப்படையில், பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

2015 மார்ச் 3ஆம் திகதி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டத்திற்கு முரணானது என்றும், அதனால் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி, பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

Hot this week

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Topics

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

யாழ்ப்பாணத்தில் சகோதரனுக்கு உதவச் சென்றவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img