Monday, November 10, 2025

வித்தியா கொலை வழக்கு; இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவத்தின் அதிர்ச்சித் தகவல்கள்!

2015ஆம் ஆண்டு புங்குடுத்தீவில் மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தனர். இந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தற்போது தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்களை வரும் நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உயர் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. நீதிபதிகளான பிரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி, மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த மனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட்டன.

இதன்போது, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, வழக்கில் சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்பட்டதையும், தமிழ் மொழிபெயர்ப்பைப் பெற நான்கரை ஆண்டுகள் ஆனதையும் சுட்டிக்காட்டினார். எனவே, மேன்முறையீட்டு விசாரணைக்கு விரைவான ஒரு திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றத்திடம் கோரினார்.

அதனடிப்படையில், பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

2015 மார்ச் 3ஆம் திகதி, பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது சிவலோகநாதன் வித்யா என்ற மாணவி கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகளுக்கு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை சட்டத்திற்கு முரணானது என்றும், அதனால் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவித்து உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி, பிரதிவாதிகள் சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.

Hot this week

DRIVERS NEEDED

LCP DISTRIBUTOR DRIVERS NEEDED IMMEDIATE Salary starts 50,000 0778738919 WhatsApp your CV

கொழும்பில் தம்பதியர் மோசடி; ஆபாச காணொளிகள் இணையத்தில்!

கொழும்பு, ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஆபாச...

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது...

போலி சட்டத்தரணி கைது; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான்...

சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்ற ஆய்வு!

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான...

Topics

DRIVERS NEEDED

LCP DISTRIBUTOR DRIVERS NEEDED IMMEDIATE Salary starts 50,000 0778738919 WhatsApp your CV

கொழும்பில் தம்பதியர் மோசடி; ஆபாச காணொளிகள் இணையத்தில்!

கொழும்பு, ராஜகிரியவின் வெலிக்கடை பகுதியில், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கக்கூடிய ஆபாச...

ஓரின சேர்க்கையின் உச்சம்; குழந்தையை கொன்ற கொடூர தாய்!

தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 5 மாத பச்சிளம் குழந்தை, தாயாலும் அவரது...

போலி சட்டத்தரணி கைது; மட்டக்களப்பு நீதிமன்றத்தில் பரபரப்பு

மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில், ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து, தான்...

சுகாதாரத் துறையில் டிஜிட்டல் மாற்ற ஆய்வு!

இலவச சுகாதாரத் துறையை டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கான வழிகாட்டுதல் குழுவை நிறுவுவதற்கான...

ஹெரோயின் கடத்தல்; விழுங்கிய பொதி மீட்பு!

மட்டக்களப்பு ஏறாவூரில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட நிலையில் 2040 மில்லி கிராம்...

யாழில் 29 வயது இளைஞன் பரிதாபமான உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் வலிப்பு ஏற்பட்ட இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று...

1818 துரித இலக்கத்திற்கு 800 முறைப்பாடுகள் பதிவு!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாகத் தகவல் வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்துக்கு...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img