ஆயிரத்திற்கும் மேற்பட்ட வைப்பாளர்களிடமிருந்து 900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு தனியார் நிதி நிறுவனங்களின் இரண்டு பணிப்பாளர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்க, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம நேற்று (16) உத்தரவிட்டார். மகேஷ் பிரியந்த அகலகமகே மற்றும் சந்திக்க யசநாத் பண்டார வீரகோன் என்ற இருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அத்துடன், இந்த வழக்கில் 10வது சந்தேகநபரான உதய புஷ்பகுமாரவை 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்தச் சந்தேகநபர் வெளிநாடு செல்வதைத் தடை செய்த நீதவான், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும், கடவுச்சீட்டு இல்லையாயின் அதற்கான ஆதாரங்களை பிரமாணப் பத்திரம் மூலம் வழங்கவும் உத்தரவிட்டார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்ற விசாரணைப் பிரிவு, இதேபோன்ற மோசடிச் சம்பவங்கள் தொடர்பாக நீர்கொழும்பு மற்றும் பொலன்னறுவை நீதிமன்றங்களிலும் இந்தச் சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
A court in Colombo has ordered the remand of two directors of a private financial company who are accused of defrauding over 1000 depositors of more than 900 crore rupees. The suspects, Mahesh Priyantha Agalakame and Chandika Yasanath Bandara Weerakoon, have been remanded until the 30th of this month. A third suspect was granted bail but was ordered to surrender his passport and is barred from leaving the country. The police also informed the court that similar cases against the suspects are pending in other courts.