Monday, October 13, 2025

உயிர்பெற்ற 900 ஆண்டு பழமையான முகம்!

இங்கிலாந்தில் வெள்ள மேலாண்மைப் பணிகள் நடந்தபோது தோண்டியெடுக்கப்பட்ட 900 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் மண்டை ஓட்டைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் அவளது முகத்தை மீண்டும் உருவாக்கியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் நிறுவனம் (EA) வெள்ள மேலாண்மை திட்டத்தைத் தொடங்கியபோது, கும்ப்ரியாவில் உள்ள கெண்டலில் இருக்கும் ஹோலி டிரினிட்டி கெண்டல் தேவாலயத்தில் இருந்து 14 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள், கணினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, அந்தப் பெண்ணின் முகம் எப்படி இருந்திருக்கலாம் என்பதற்கான முதல் வடிவத்தை உருவாக்கினர். தற்போது, இந்த முகம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தேவாலயத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாக தேவாலயத்தின் சுவர் அருகே இருந்ததால் பெரும்பாலான எலும்புக்கூடுகள் நசுங்கிக் காணப்பட்டாலும், அந்தப் பெண்ணின் மண்டை ஓடு மட்டும் இந்த மறுகட்டமைப்புக்குத் தேவையான அளவுக்கு நல்ல நிலையில் இருந்துள்ளது. இந்த ஆய்வுக்குழு தற்காலிகமாக அவளுக்கு கெண்டல் பெண் எனப் பெயரிட்டுள்ளனர்.

இருப்பினும், இந்த உருவத்தைக் காண வரும் பொதுமக்களிடம், இந்தப் பெண்ணுக்குப் பொருத்தமான ஒரு பெயரைப் பரிந்துரைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

“நாம் கண்டெடுக்கும் உடல்களை ஆராயப் பல நுட்பங்கள் உள்ளன. ஒரு பெண்ணின் முகத்தை இவ்வாறு மீண்டும் உருவாக்குவது எங்களுக்குக் கிடைத்த ஒரு நல்ல வாய்ப்பு. அவர் இப்படித்தான் இருந்திருக்கலாம் என நாங்கள் நம்புகிறோம்,” என மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் டீன் கூறியுள்ளார்.

Scientists in the UK have recreated the face of a woman from a 900-year-old skull found during flood management work. The skull was one of 14 skeletons discovered in 2022 at a church in Cumbria. Using computer technology, researchers from Liverpool John Moores University reconstructed the face, which is now on display. The team has tentatively named her the “Kendal woman,” and the public has been invited to suggest a permanent name.

Hot this week

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

Topics

வவுனியாவில் மாபெரும் கோலப் போட்டி – 150ற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

நேற்றைய தினம், அக்டோபர் 12. 2025 (ஞாயிற்றுக்கிழமை) வவுனியா மாவட்ட செயலகத்தின் அனுமதியுடன்,...

மானிப்பாயில் பதற்றம்: வாகனங்களுக்கு தீ வைத்த மர்மக்கும்பல்!

மானிப்பாய் பொலிஸ் பிரிவின் சண்டிலிப்பாய் வடக்கு பகுதியில், அடையாளம் தெரியாத நான்கு...

அதிர்ச்சிச் சம்பவம்: சடலத்தை பாலியல் வன்புணர்வு செய்த நபர்!

மத்தியப் பிரதேச மாநிலம், புர்ஹான்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையின்...

பதற்றம்: அளுத்கமவில் திடீர் தீ விபத்து!

அளுத்கம பகுதியில் தீ விபத்து! இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை அளுத்கம நகரில்...

விசா மாற்றம்: கனடாவுக்குச் செல்ல விரும்புவோருக்கு முக்கிய செய்தி!

கனடாவில் வெளிநாட்டு விசா வழங்கும் நடைமுறைகளில் சில இறுக்கமான மாற்றங்கள் கொண்டு...

சோகம்: நீர்வீழ்ச்சியில் தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு!

கந்தேநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நலயகர் எல்ல நீர்வீழ்ச்சியில் ஒருவர் தவறி விழுந்து...

சாலை விபத்தில் இருவர் பலி

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் அவ்வப்போது...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img