கம்பஹா, மீரிகம பிரதேசத்தில் 2 பிள்ளைகளின் தாயான தனது மனைவியை வெட்டிக் கொலை செய்த கணவர் நேற்று மாலை பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
மீரிகம ரெண்டபொல என்ற இடத்தில், வீட்டுக்கு அருகில் 33 வயதான தக்சிலா தில்ருக்ஷி என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தக் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கொல்லப்பட்ட பெண், நேற்று மதியம் அவரது வீட்டிற்கு அடுத்த வீட்டின் முற்றத்தில் வெட்டிக் கொல்லப்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அத்துடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொலையை செய்தவரின் கணவர் சிறிது காலம் வெளிநாட்டில் இருந்துவிட்டு, ஒரு மாதத்திற்கு முன்பு தான் நாட்டுக்குத் திரும்பியுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
In Mirigama, Gampaha, a man who recently returned from abroad surrendered to the police after allegedly murdering his wife, a mother of two. The incident reportedly occurred during a domestic dispute, and the woman’s throat was found to be slit. Mirigama police are currently investigating the case.