பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் ஓர் இளைஞர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளது.
அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் இருந்து குறித்த நபர் தவறி விழுந்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர், உடனடியாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உருத்திரபுரத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞர் எனத் தெரியவந்துள்ளது. அவரது சடலம் தற்போது கிளிநொச்சி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A young man died after he fell from a bus in Kilinochchi. The 26-year-old, a resident of Uruthirapuram, was a passenger on a bus travelling towards Uruthirapuram when the accident occurred. He was taken to the hospital but succumbed to his injuries. The bus driver has been arrested, and the police are conducting further investigations.