Friday, September 5, 2025

மட்டன் குருமா செய்வது எப்படி?

மட்டன் குருமா சாதத்துக்கும் ரொட்டிக்கும் ஏற்ற ஒரு சைட் டிஷ். இதனை எப்படி எளிமையாகவும் சுவையாகவும் செய்யலாம் என்று பார்க்கலாம். இதில் வெங்காயம், தக்காளி, மசாலா கலவைகளைச் சேர்த்து செய்வதால் இதன் சுவை சற்று அதிகமாகவே இருக்கும்.

தேவையான பொருட்கள்:

  • மட்டன் – அரை கிலோ
  • தயிர் – 1 கப்
  • இஞ்சி விழுது – 3 டேபிள் ஸ்பூன்
  • பூண்டு விழுது – 3 டேபிள் ஸ்பூன்
  • பொரித்த வெங்காயம் – 1 கப்
  • கரம் மசாலா தூள் – 1 டீஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • பட்டை – 2
  • பிரியாணி இலை – 2
  • ஏலக்காய் – 6
  • கிராம்பு – 6
  • கருப்பு ஏலக்காய் – 2
  • உப்பு – தேவையான அளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

படி 1: முதலில் ஒரு பாத்திரத்தில் மட்டனை எடுத்துக் கொள்ளவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, மட்டனை 5 நிமிடங்கள் நன்றாக ஊற வைக்கவும்.

படி 2: அடுத்து, ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், கருப்பு ஏலக்காய், சிறிதளவு கரம் மசாலா, அரை கப் வெங்காயம், சிறிதளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும்.

படி 3: பின்பு, ஊற வைத்த மட்டனை அதில் சேர்த்து நன்கு வதக்கவும். மட்டன் வேகத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, கலவை கொதித்து வந்ததும் குக்கரை மூடி வைக்க வேண்டும். 5 முதல் 6 விசில் வரும்வரை வேக வைத்து, விசில் அடங்கியதும் குக்கரைத் திறக்கவும்.

படி 4: அவ்வளவுதான்! சுவையான மட்டன் குருமா தயார். இதனைச் சாதம், ரொட்டி, இட்லி, தோசை என எதனுடன் சேர்த்துச் சாப்பிட்டாலும் ருசியாக இருக்கும்.

Hot this week

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

Topics

முடிக்கு ஹேர் கலரிங் எத்தனை முறை செய்யலாம்..?

தனக்குள் ஒரு மாற்றம் வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் ஹேர் கட் செய்கிறார்கள்....

ஐ லவ் யூ’ கூறியதால் வந்த வினை; 15 வயது மாணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண்!

இந்தியாவின் ஆந்திர மாநிலம், விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் ஒருவன்,...

பெக்கோ சமனின் மனைவி எடுத்துள்ள தீர்மானம்!

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் 'பெக்கோ...

3 குழந்தைகளை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற தந்தை

இந்தியாவின் ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், எர்ரகொண்டபாலையம் மண்டலம், பெத்தபொயபள்ளையைச் சேர்ந்த...

இலங்கையில் போதைப்பொருள் தொழிற்சாலை!

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்காக இரண்டு பாகிஸ்தானியர்கள் நாட்டிற்குள்...

விஷம் அருந்திய கணவன்; காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட்!

களுத்துறையில், குடும்பத் தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 23...

எல்ல பேருந்து விபத்து; ஒருவர் கைது!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15...

அதிகபட்ச அரிசி விலையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை!

நுகர்வோர் விவகார அதிகாரசபை 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில்,...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img