கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம், ஹன்சூர் தாலுகா ஹிரசனஹில் கிராமத்தைச் சேர்ந்த ரக்ஷிதா (20) என்ற யுவதி, தனது கள்ளக்காதலனால் வெடிவைத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கேரளாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை ரக்ஷிதா திருமணம் செய்திருந்த போதிலும், அதே கிராமத்தைச் சேர்ந்த சித்தராஜு என்ற உறவுக்கார இளைஞருடன் கள்ளக்காதல் உறவில் இருந்ததாகத் தெரிகிறது.
திங்கட்கிழமை (25) அன்று ரக்ஷிதாவும் சித்தராஜுவும் ஹிர்யா கிராமத்தில் உள்ள ஒரு விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சித்தராஜு, தான் மறைத்து வைத்திருந்த வெடிமருந்தை ரக்ஷிதாவின் வாயில் வைத்து வெடிக்கச் செய்துள்ளார். இதில் அவரது முகம் முழுவதும் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொடூரச் சம்பவத்திற்குப் பிறகு, சித்தராஜு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், வெடிச்சத்தம் கேட்டு ஓடிவந்த விடுதி ஊழியர்கள் அவரை மடக்கிப் பிடித்து பொலிசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், சித்தராஜுவைக் கைது செய்ததுடன், ரக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
In a shocking incident in Karnataka, a 20-year-old woman named Rakshitha was brutally murdered by her lover, Siddharaju, who placed an explosive in her mouth and detonated it. The crime occurred after a heated argument at a lodge. Siddharaju was caught by lodge staff while attempting to flee and has since been arrested by the police.