மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு ஒரு புகார் கிடைத்ததையடுத்து, விசாரணைகளைத் தொடங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அந்த நபரைக் கடத்திச் சென்றபோது, மற்றொரு நபர் வீதியை மறித்து, அவரைத் தாக்கி கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் தேவஹுவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக 26 வயதான கடற்படை சிப்பாய் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உயிரிழந்தவருக்கும் சந்தேகநபருக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த தகராறு அதிகரித்ததால் இந்தக் கொலைச் சம்பவம் நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சடலம் தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மகுலுகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
A 59-year-old man riding a motorcycle was attacked and killed in the Mahulugaswewa police division. Following a tip-off, police launched an investigation and arrested a 26-year-old navy soldier in connection with the crime. Initial police investigations suggest that a long-standing dispute between the victim and the suspect escalated, leading to the murder. The body has been placed in the Dambulla Hospital mortuary, and police are conducting further inquiries.