Saturday, December 6, 2025

இலங்கைக்குள் கடத்த முயன்ற பல கோடி பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!

இலங்கைக்குக் கடத்திச் செல்லவிருந்த சுமார் ஆறு கோடி இந்திய ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகளை இந்திய கடல்சார் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கடற்கரை வழியாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகள் இலங்கைக்குக் கடத்தப்படுவதாக இந்தியக் கடல்சார் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வேம்பார் சோதனைச் சாவடியில் காவல்துறையினர் நேற்று அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அதிவேகமாக வந்த சிறிய லொறி ஒன்றை நிறுத்தி காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 32 மூட்டைகளில் வெளிநாட்டு சிகரெட் பைக்கட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வாகனத்தின் சாரதியான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட விசாரணையில், இந்தச் சிகரெட் பைக்கட்டுகள் படகு மூலம் இலங்கைக்குக் கடத்திச் செல்லவிருந்தன என்பது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட இந்த சிகரெட் பைக்கட்டுகளின் மதிப்பு சுமார் 6 கோடியே 40 லட்சம் இந்திய ரூபாய் என்று இந்தியக் கடல்சார் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


 

Indian marine police have seized foreign cigarette packets worth approximately six crore Indian rupees that were being smuggled to Sri Lanka. Acting on a tip-off, police intercepted a small lorry at a checkpoint near Vembar beach in the Thoothukudi district. They found 32 bundles of foreign cigarettes and arrested the 52-year-old driver. Investigations revealed that the cigarettes were intended to be transported to Sri Lanka by boat.

Hot this week

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

Topics

கொழும்பில் இரவு அனர்த்தம்: மேயர் விராய் கெலி பல்சதார் செயல்பாடு

கொழும்பு, ஜெம்பெட்டா வீதியில் அமைந்துள்ள 95 ஆம் தோட்டப் பகுதியில் சீரற்ற வானிலையால்...

வடகிழக்கு பருவமழை படிப்படியாக உருவாகிறது

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி நிலைமை படிப்படியாக உருவாகி வருவதாக வளிமண்டலவியல்...

Job vacancy available Female

வேலை வாய்ப்பு பெண்கள் மட்டும் 1. A/L முடித்தவர் 2. அடிப்படை கணினி அறிவு 3. கணக்கியல்...

Vacancy Driving 

வேலைவாய்ப்பு – Driving எங்கள் நிறுவனத்தில் heavy vehicle Driving வேலைக்கான நபர்...

திருமணத்திற்கு மூன்று நாளில் மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி

இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டு கடந்த ஒரு வருடமாகக் காதலித்துத் திருமணம் நடந்த...

அவசரகாலத்தில் வதந்தி பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை

அவசரகாலத்தில் பொதுமக்களிடையே குழப்பத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்வகையில் சமூக ஊடகங்களில் முறையற்ற வகையில்...

யாழில் பகலில் வெட்டுக்கொலை; ஆறு பேருக்கு உத்தரவு

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் இளைஞரொருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...

சிவனொளிபாதமலை யாத்திரை இன்று தொடக்கம்

இம்முறை சிவனொளிபாதமலை பருவ கால யாத்திரை இன்று (04) ஆரம்பமாகிறது. இன்று ஆரம்பமாகும்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img