Wednesday, October 15, 2025

தமிழர் பகுதியில் விவசாயிகள் நிலங்களை அபகரிக்க தனியார் நிறுவனம் அடாவடி!

திருகோணமலை பட்டணம் மற்றும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட முத்து நகர் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில், சூரிய மின் சக்தி உற்பத்திக்கு மேலும் ஒரு தனியார் நிறுவனம் நேற்று நுழைந்ததால், விவசாயிகளுக்கும் அந்த நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் கைகலப்பாக மாறியது.

இந்தத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை துறைமுக அதிகார சபை அதிகாரிகளும், குறித்த திட்டக் குழுவினரும் அங்கு வந்தபோது, அவர்களைத் தடுக்க முயன்ற விவசாயிகளைத் தனியார் நிறுவன ஊழியர்கள் தாக்கியதாகத் தெரியவருகிறது.

சூரிய மின் சக்தி உற்பத்திக்காக முத்து நகர் பகுதியில் விவசாயிகளின் விவசாய நிலங்கள் ஏற்கனவே அபகரிக்கப்பட்டுத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மேலும் ஒரு விவசாய நிலத்தில் திட்டத்தை தொடங்க சென்றபோதே இந்தக் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில், அபகரிக்கப்பட்ட தங்களது விவசாய நிலங்களை மீட்டுத்தரக் கோரி முத்து நகர் பகுதி விவசாயிகள் பல போராட்டங்களை முன்னெடுத்தனர்.

வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்படாத நிலங்களில் விவசாயம் செய்வதற்கு ஒத்துழைப்பதாக, திருகோணமலை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் உறுதியளித்திருந்தபோதிலும், அது இதுவரை சாத்தியமாகவில்லை.

 

A conflict erupted between farmers and private company employees in the Muthunagar agricultural area of Trincomalee when another private company attempted to begin a solar power project on the land. Farmers, who have already lost their land to similar projects, tried to prevent the company from accessing the site and were reportedly assaulted. Despite previous promises from National People’s Power MPs to support the farmers in cultivating the undeveloped land, the situation remains unresolved.

Hot this week

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

Topics

பேருந்து நிலையத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த போலீஸ்; சம்பவம்

பிபில பேருந்து நிலையத்தில் பகலில் பத்து வயது சிறுமியை குடிபோதையில் முத்தமிட்டதற்காக...

Vacancy Delivery Boy

DOMEX COURIER Delivery Boy vacancy available Bike needed Age below 50 0771234885

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிரடியாக கிளம்பிய சண்டை; வெளிப்படும் எப். ஜேவின் உண்மையான முகம்

பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் எப். ஜேவின் உண்மை முகம்...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு; இலங்கையில் இருந்து 100 இளம் பெண்கள் பயணம்

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் தென் கொரியாவிற்கு வேலைவாய்ப்புக்காக 2,927 இலங்கையர்கள்...

பசறை சுரங்க விபத்து; மண் சரிவில் ஒருவர் உயிரிழப்பு

பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம் ஒன்றில் இன்று...

வங்கிக் கணக்கில் 5.69 இலட்சம் ரூபாய் மோசடி; நால்வர் கைது

2024 மே 29 அன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் வடமேல் மாகாண கணினி...

மட்டக்களப்பு; யானைத் தாக்குதலில் விவசாயி உயிரிழப்பு

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏரளக்குளம் பகுதியில், வயலில் இருந்து வீடு...

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அயன மண்டலங்களுக்கு இடையிலான ஒடுங்கும் வலயமானது தற்போது நாட்டின் வானிலையில் தாக்கம்...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img