பெரியநீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாவணை வீதியில் இடம்பெற்ற ஒரு பெண் கொலை சம்பவம் தொடர்பாக, அம்பாறை குற்றத்தடுப்புப் பிரிவினர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 30ஆம் திகதி நடந்த இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் குழு மேற்கொண்ட விசாரணைகளைத் தொடர்ந்து இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். அதன்படி, கொலைக்கு உதவிய குற்றத்திற்காக சந்தேகநபர் நேற்று (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதேவேளை, சந்தேகநபருக்கு சொந்தமான ஒரு வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர், பெரியநீலாவணை 01ஆம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அம்பாறை குற்றத் தடுப்புப் பிரிவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
A 20-year-old man was arrested by the Ampara Crime Division in connection with the murder of a woman on the Neelavanai Road in the Periyaneelavanai police division. The suspect was arrested yesterday for assisting in the crime that took place on the 30th of last month. Police have also seized a van and a motorcycle belonging to the suspect. The Ampara Crime Division is conducting further investigations into the incident.