Tuesday, September 9, 2025

மாமன் – மருமகன் தகராறில் ஒருவரின் உயிர் பறிபோனது!

காலியில் உள்ள தல்கஹவத்த பிரதேசத்தில் மாமனாரால் தாக்கப்பட்ட மருமகன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்தனர். இந்தக் கொலைச் சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

மொரகொட பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான மருமகனே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட மருமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.

பின்னர், போதையில் இருந்த நண்பர்களை அவர்களின் வீடுகளில் கொண்டுபோய் விடுவதற்காக, தனது மாமனாரிடம் முச்சக்கர வண்டியை கேட்டுள்ளார். ஆனால், மாமனார் அதை கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த மருமகன், ஒரு கம்பால் வீட்டின் கதவை அடித்து உடைத்ததுடன், தனது மனைவியையும் தாக்க முயற்சித்துள்ளார். அப்போது, போதையில் இருந்த மருமகனைத் தடுப்பதற்காக மாமனார் தனது மருமகனை ஒரு கம்பால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மருமகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் நடந்ததும், சந்தேக நபராகக் கருதப்படும் 58 வயதுடைய மாமனார் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். மேலும், இந்தக் கொலைச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கரந்தெனிய பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

________________________________________________________________________

In Thalagahawatta, Galle, a son-in-law was killed by his father-in-law following a dispute over a tuk-tuk. The 24-year-old son-in-law, who was intoxicated, became angry when his father-in-law refused to let him use the tuk-tuk to drop off his friends. The son-in-law then broke the house door and attempted to assault his wife. In an effort to stop him, the father-in-law struck him with a stick, causing his death on the spot. The 58-year-old father-in-law has since surrendered to the Karandeniya Police, who are conducting further investigations.

Hot this week

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Topics

யாழ்ப்பாணத்தில் வாள் வெட்டு; ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாள்வெட்டுத்...

பெற்றோர், பாதுகாவலர் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க அமைச்சரவை அனுமதி!

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியதாக, பெற்றோர்...

vacancy parcel packing

*வவுனியாவில் வேலைவாய்ப்பு* வவுனியாவில் ஹாட்வெயார் பொருட்களை விநியோகிக்கும் 🪏🪚🔩⚒️🪛🔧🛠️ *SNR MARKETING* 🔌🧰🔨⚙️⛓️🔫🚿 நிறுவனத்திற்கு விநியோகிக்க தயார் நிலையில்...

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு!

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு...

கொழும்பிலிருந்து சென்ற தமிழ் இளைஞன் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகி சடலமாக மீட்பு!

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த ஒரு இளைஞன் தவறான இடத்தில்...

Salesperson Work

LCP DISTRIBUTOR Salesperson Age below 35 Vavuniya Salary 45,000 0778738919

யாழ்ப்பாணத்தில் சகோதரனுக்கு உதவச் சென்றவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில், தனது சகோதரனின் வீட்டுக் கூரை வேலை செய்துகொண்டிருந்த ஒருவர் கீழே...

இரட்டைக் கொலைச் சம்பவம்; மூவர் கைது!

கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி மித்தெனிய பொலிஸ் பிரிவின் தேக்கவத்த...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img