மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில், இன்று பிற்பகல் 1 மணிக்குப் பிறகு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.
இந்த மாகாணங்களின் சில பகுதிகளில், 50 மில்லிமீட்டர் அளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும், மின்னல் தாக்கங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
____________________________________________________________________
The Department of Meteorology has forecast rain for several provinces in Sri Lanka, including Western, Sabaragamuwa, and Northwestern, as well as the Galle, Matara, Kandy, and Nuwara Eliya districts. Rain or thunderstorms are also expected in many places in the Northern, Eastern, and Uva provinces after 1 PM, with some areas potentially receiving moderate to heavy rainfall of up to 50 mm. The public is advised to take precautions against potential damage from strong winds and lightning during these events.