யாழ்ப்பாணம், மானிப்பாய், நவாலி தெற்கு பகுதியில் பிறந்து நான்கு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தை கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிறந்துள்ளது. பிறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை திடீரென உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம், உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிறந்து சில நாட்களிலேயே குழந்தை உயிரிழந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
_______________________________________________________________________
A four-day-old baby boy died tragically in the Manipay area of Jaffna. The baby was born at the Jaffna Teaching Hospital on the 7th of this month. The infant’s sudden death has caused great sorrow, and the body has been placed at the hospital for an autopsy to determine the cause of death.