மட்டக்களப்பில் சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதுடன், அந்த வழக்குக்குச் சாட்சியமளிக்கவிருந்த தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் ஒருவரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், வரும் 22ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சிறிய தந்தைக்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தாயாருக்கு அச்சுறுத்தல்
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: கடந்த 2016ஆம் ஆண்டு, மட்டக்களப்பைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவரை தகாதமுறைக்கு உட்படுத்தியதாக, அவரது சிறிய தந்தை கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலையாகியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த வழக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்த வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு, விசாரணை இடம்பெற்று வந்தது.
இந்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, சிறுமியின் தாயார் ‘சிறுமிக்கு அப்படி ஒரு சம்பவம் இடம்பெறவில்லை’ என சாட்சியமளித்துள்ளார். இதைத் தொடர்ந்து, சிறிய தந்தை சிறுமியின் தாயாரை பொய் சாட்சியம் அளிக்குமாறு அச்சுறுத்தியது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, சாட்சியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அந்தச் சிறுமியின் சிறிய தந்தையாரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், அடுத்த வழக்கு விசாரணைக்கு வரும் 22ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் கட்டளையிட்டார்.
______________________________________________________________
A man has been remanded until the 22nd of this month for allegedly sexually assaulting a minor and threatening her mother, who was a witness in the case. The suspect, the victim’s uncle, was initially arrested in 2016 for the assault on the then 11-year-old girl. After being released on bail, the case was transferred to the Batticaloa High Court. During a recent hearing, the girl’s mother testified that the assault did not occur, and subsequent investigations revealed that the uncle had threatened her to give false testimony.