உடல் எடை கூடி போனதின் விளைவாக படவாய்ப்புகளை இழந்த அனுஷ்கா: ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கியவர்!
2016 ஆம் ஆண்டில் வெளியான ‘சிங்கம்-3’ படத்திற்குப் பிறகு, அனுஷ்கா நேரடித் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. அதன் பிறகு, 2023 இல் வெளியான ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற தெலுங்குப் படத்தில் அவர் கடைசியாக நடித்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்திருந்த ‘காட்டி’ திரைப்படம் அண்மையில் வெளியானது. ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்புப் பெறாததால் அனுஷ்கா வருத்தமடைந்திருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அவர் திடீரென அறிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்துப் பதிவிட்டுள்ள அவர், ‘நான் உலகத்துடன் கொஞ்சம் தொடர்பில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் சமூக வலைத்தளங்களுக்குச் சற்று ஓய்வு கொடுக்கிறேன். விரைவில் புதிய கதைகளுடன் உங்களைச் சந்திப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். அனுஷ்காவின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Actress Anushka Shetty has announced she is taking a break from social media. This decision comes after her recent film, ‘Kaatti,’ which she starred in after a two-year hiatus, failed to receive a good reception. In her social media post, she explained she wishes to take a break to connect with the world and promised to return with new stories, a move that has surprised her fans.